Monday 30 April 2012

சிசு வளர்ச்சி


ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி


ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை இங்கே கொடுத்துள்ளேன்.

ஒன்றாம் மாதம் :   பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும். முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.   இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் :  இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.

இரண்டாம் மாதம் :   சிசுவிற்கு முகம் உருவாகிறது.  கண் பகுதி குழி தோன்றும். மூளை,  இதயம்,  சுவாசப்பகுதி,  கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும்.  இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

முன்றாம் மாதம் :    உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும்.  நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

நான்காம் மாதம் :  தலைமுடி, புருவம்  போன்றவை  லேசாக  வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

ஐந்தாம் மாதம் :   சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார்.  "லாலுனுகோ"  என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

ஆறாம் மாதம் :   சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில்
இருந்து குழந்தை  தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை
அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம்  மாதம் :   குழந்தை கண் திறக்கும்.  எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

எட்டாம் மாதம் :   நகம் வளரும். முடி வளர்ச்சி  அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி
தலைகீழாக  குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம் :   ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.  பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

No comments: