ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி
ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை இங்கே கொடுத்துள்ளேன்.
ஒன்றாம் மாதம் : பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும். முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும். இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
ஒன்றாம் மாதம் : பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும். முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும். இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் : இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.
இரண்டாம் மாதம் : சிசுவிற்கு முகம் உருவாகிறது. கண் பகுதி குழி தோன்றும். மூளை, இதயம், சுவாசப்பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.
முன்றாம் மாதம் : உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும். நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.
நான்காம் மாதம் : தலைமுடி, புருவம் போன்றவை லேசாக வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.
ஐந்தாம் மாதம் : சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். "லாலுனுகோ" என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.
ஆறாம் மாதம் : சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில்
இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை
அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.
ஏழாம் மாதம் : குழந்தை கண் திறக்கும். எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.
எட்டாம் மாதம் : நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி
தலைகீழாக குழந்தை செல்லும்.
ஒன்பதாம் மாதம் : ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும். பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.
No comments:
Post a Comment